திருவள்ளுவர் சிலை: பார்வையாளர்களுக்கு 4 மாதம் தடை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2013 10:02
சென்னை: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை வளாகத்திற்கு பார்வையாளர்கள் சென்று பார்வையிடுவதற்கு, நான்கு மாதங்களுக்கு தற்காலி தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு செய்திக்குறிப்பு: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, ரசாயன பூச்சு பூசும் பணி, மார்ச், 1ம் தேதியிலிருந்து, ஜூன், 30ம் தேதி வரை நடக்கிறது. இதனால், திருவள்ளுவர் சிலை வளாகத்துக்கு சென்று பார்வையிடுவதற்கு, பார்வையாளர்களுக்கு, 4 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.