பதிவு செய்த நாள்
04
மார்
2013
10:03
ஊட்டி: ஊட்டி காந்தல் விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாத சுவாமி கோவிலில், மகா சிவராத்திரி பெருவிழா வரும் 10ம் தேதி நடக்கிறது.ஊட்டி காந்தல் தட்சிணாமூர்த்தி மடாலயத்தில் எழுந்தருளியுள்ள விசாலாட்சியம்பாள் உடனமர் காசிவிஸ்வநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி பெருவிழா வரும் 8ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை நடக்கிறது. 8ம் தேதி மாலை 3:00 மணிக்கு மடாதிபதி மருதாசல அடிகளார் தலைமையில் திருவிளக்கு பூஜை நடக்கிறது. 9ம் தேதி மாலை 3:30 மணிக்கு மகா பிரதோஷ விழா நடக்கிறது. நந்திதேவருக்கு சிறப்பு அபிஷேகம், வெண்ணை அலங்காரம், காசி விஸ்வநாத சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம், மாலை 5:30 மணிக்கு அர்ச்சனை, மகா தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு உற்சவ மூர்த்தி ஆலயம் வலம் வருதல், இரவு 7:00 மணிக்கு பிரசாத விநியோகம் நடக்கிறது. திருவிழா நாளான 10ம் தேதி காதல 7:00 மணிக்கு காலசாந்தி பூஜை, காலை 11:00 மணிக்கு உச்சிகால பூஜை, காலை 11:30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மதியம் 2:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா யாக பூஜை, மாலை 3:30 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 5:00 மணிக்கு மகா தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு சுவாமி கோவில் வலம் வருதல், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலை 5:00 முதல் 6:30 மணி வரை நாத பிரம்ம சங்கீத சபாவின் கர்நாடக சங்கீதம், மாலை 6:30 மணிக்கு பரதநாட்டியம் நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு பாட்டு பட்டிமன்றம் நடக்கிறது. 11ம் தேதி காலை அமாவாசை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் முன்னேற்ற சங்கம், சேவா சங்கம், ஸ்ரீமான் ராயபோயர் குழுவினர் மற்றும் பக்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.