பதிவு செய்த நாள்
04
மார்
2013
10:03
தர்மபுரி: தர்மபுரி, வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில் மஹா சிவராத்திரி மயான கொள்ளை திருவிழா, நேற்று துவங்கியது. வரும், 13ம் தேதி வரை, விழா நடைபெறுகிறது.விழாவையொட்டி, இன்று (மார்ச், 4) முதல், 9ம் தேதி வரை, நாள்தோறும் காலையில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகமும், மாலையில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலாவும் நடக்கிறது.தொடர்ந்து, 9ம் தேதி மாலை மூகாம்பிகை அலங்காரத்தில், அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 10ம் தேதி காலை, 10 மணிக்கு மேல், 11.30 மணிக்குள், அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.பகல், 12.30 மணிக்கு, பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. இரவு, 8 மணிக்கு திருக்கல்யாண கோலத்தில், அம்மன் கண்ணாடி ரதத்தில், பூதவாகன திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்சியான முகவெட்டு, 11ம் தேதி அதிகாலை, 1 மணிக்கும், பூங்கரகம் காலை, 5 மணிக்கும் நடக்கிறது. அன்று காலை, 10 மணிக்கு அம்மன் பூதவாகனத்தில் மயானம் புறப்படுதல், மயானத்தில் அம்மன் மயானக்கொள்ளை நிகழ்சிகள் நடக்கிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.