பதிவு செய்த நாள்
04
மார்
2013
10:03
கன்னியாகுமரி: அய்யா வைகுண்டசாமியின் 181வது அவதாரதினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாகர்கோவில் இருந்து அதிகாலை 5 மணிக்கு சாமிதோப்பிற்கு பிரம்மாண்ட ஊர்வலம் தொடங்குகிறது. அய்யாவைகுண்டசாமியின் அவதாரதினம் மாசி மாதம் 20ம் தேதி அய்யாவழி பக்தர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 181வது அவதாரதினத்தை முன்னிட்டு லட்சகணக்கான அய்யாவழி பக்தர்களின் பிரம்மாண்டமான ஊர்வலம் நாகர்கோவிலிருந்து சாமிதோப்பிற்கு வருகிறது.விழாவினைமுன்னிட்டு நேற்று காலை அய்யாவைகுண்டசாமி விஞ்சை பெற்ற திருச்செந்துர் கடற்கரையில் இருந்து நாகர்கோயில் நோக்கி வாகன பவனி ஒன்று புறப்பட்டு திருச்செந்துர்,திசையன்விளை,உடன்குடி,கூடன்குளம்,செட்டிகுளம்,அம்
பலவாணபுரம்,ஆரல்வாய்மொழி வழியாக மாலை 6 மணியளவில் நாகர்கோவில் நாகராஜதிடல் வந்தடைந்தது. அதேபோல் அய்யா வைகுண்டசாமி சிறையில் இருந்த திருவனந்தபுரம் சிங்காரதோப்பில் அமைந்துள்ள பத்மநாபசுவாமி கோயில் வடக்குநடையில் இருந்து மற்றொரு வாகனபேரணி பாலலேகாதிபதி தலைமையில் புறப்பட்டுநெய்யாற்றின்கரை, பாறசாலை,களியக்காவிளை,மார்த்தாண்டம்,தக்கலை,வழியாக நாகர்கோயில் நாகராஜதிடலை இரவு 7 மணிக்கு வந்தடைந்தது. மாலை 3 மணிக்கு சாமிதோப்பு தலைøமபதியில் இருந்து ஆதலவிளை மலையில் வைகுண்டர்தீபம் ஏற்றுவதற்காக மகாதீபஊர்வலம் புறப்பட்டு இரவு 7 மணியளவில் மகாதீபம் ஏற்றப்பட்டது.மேலும் இரவு 8 மணியளவில் நாகர்கோவில் நாகராஜாதிடலில் அய்யாவழி சமயமாநாடு நடந்தது.இம்மாநாட்டில் சொற்பொழிவு, இசைநி கழ்ச்சி,திருஏடுவாசிப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
பிரம்மாண்ட ஊர்வலம்: அய்யா வைகுண்டசாமியின் அவதாரதினமான இன்று அதி காலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜதிடலிலிருந்து லட்சகணக்கான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான மாசி ஊர்வலம் துவங்குகிறது. ஊர்வலத்திற்கு பாலபிரஜாதிபதி அடிகள் தலைமைவகிக்கிறார். பாலலோகாதிபதி,கிருஷ்னராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ஊர்வலத்தில் அய்யாவின் அகிலத்திரட்டை தாங்கிய வாகனமும்,முத்துக்குடைகளுடன், ஊர்வலம் நாகர்கோவிலில் இருந்து கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்குதாமரைகுளம் வழியாக காலை 11 மணியளவில் சாமிதோப்பு தலைமைபதி வந்தடைகிறது.இந்த ஊர்வலத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் குடும்பத்தோடு கலந்து கொள்கின்றனர். ஊர்வலத்திற்கு பல்வேறு இடங்களில் வரவேற்பு கொடுக்க படுகிறது. ஊர்வலத்தில் வரும் பக்தர்கள் பதியில் சென்று அய்யாவை வழிபடுகின்றனர்.இரவு சாமிதோப்பில் வாகன பவனி, அன்னதர்மம், சமயமாநாடு,கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது அவதாரதினவிழாவினை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரம், திருநெல்வேலி, திருச்செந்துர், நாகர்கோவிலில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.கன்னியாகுமரி டி.எஸ்.பி பாலகிருஷ்னன் தலைமையில் போலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பதி நிர்வாகிகள் பால பிரஜாபதிஅடிகள்,பாலஜனாதிபதி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.