தென்காசி: தென்காசியில் திருக்குறள் முற்றோதுதல் வேள்வி நடந்தது.தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் திருக்குறள் முற்றோதுதல் வேள்வி நடந்தது. தாணு சார்பில் நடந்த இவ்வேள்விக்கு ராஜபாளையம் சேக்கிழார் மன்ற செயலர் பூமிநாதன் தலைமை வகித்தார். செல்வராஜ் முன்னிலை வகித்தார். திருவள்ளுவர் கழக செயலர் சிவராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.சென்னை மெட்ரோ ரயில் ஆலோசகர் வக்கீல் ராஜாராம், வக்கீல் அரிசங்கர், ஆய்க்குடி கிளாங்காடு வரதயன் கிராமம் சுப்பிரமணி சேரிடரி டிரஸ்ட் மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இரவு நடந்த ஆய்வு பொழிவு கூட்டத்திற்கு புலவர் பழனியப்பன் தலைமை வகித்தார். செயலர் சிவராமகிருஷ்ணன் வரவேற்றார். துணைச் செயலர் குத்தாலிங்கம் அறிக்கை வாசித்தார். மாணவர் அஜய்கள்ளபிரான் திருக்குறள் மனனம் செய்தார். அம்பாசமுத்திரம் திருக்குறள் பேரவை செயலர் ராமச்சந்திரன் ஆய்வுரையாற்றினார்.சதாசிவம், தீத்தாரப்பன், பூமிநாதன், செல்வராஜ், மாடசாமி ஆகியோர் கலந்துரையாடல் நடத்தினர். சந்திரசேகரன் நன்றி கூறினார்.