தென்காசி: தென்காசி தட்சிணாமூர்த்தி கோயில் மற்றும் ஷீரடி சாய்பாபா கோயிலில் நாளை (7ம் தேதி) சிறப்பு வழிபாடு நடக்கிறது. தென்காசி ஆயிரப்பேரி ரோடு தட்சிணாமூர்த்தி கோயிலில் நாளை (7ம் தேதி) மாசி மாத கடைசி வியாழனை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது. காலை சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, திருவிளக்கு அலங்கார வழிபாடு, மாலை தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை ஐயப்ப சாது தலைமையில் விழா கமிட்டியார் செய்து வருகின்றனர். தென்காசி ஆய்க்குடி ரோடு ஷீரடி சாய்பாபா கோயிலில் நாளை காலை, மாலை நேரங்களில் சிறப்பு ஆரத்தி நடக்கிறது. மேலும் சிறப்பு அபிஷேகம், அரச்சனை மற்றும் பஜனை நடக்கிறது. மாலை அன்னபூரணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை சுப்புலட்சுமி துரைசாமி கல்வி அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.