ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 17ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2013 10:03
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 17ல் காப்புகட்டுதலுடன் துவங்கி, பத்து நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது. ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயிலில் 73வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா மார்ச் 17ல் காலை 8 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் ஆன்மிக சொற்பொழிவுகளும், கிராமிய இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர திருவிழா மார்ச் 26ல் நடைபெறுகிறது. பக்தர்கள் காப்புகட்டி விரதமிருந்து பங்குனி விழாவில் நொச்சிவயல் ஊரணியிலிருந்து பல்வேறு காவடிகள் எடுத்தும் அலகு குத்தியும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலில் நேர்த்திகடன் செலுத்துவர். அன்று மாலையில் கோயில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்துவர். விழா ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி கணேசன் செய்து வருகிறார்.