பதிவு செய்த நாள்
13
மார்
2013
10:03
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், போலீசார் மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு, பயங்கரவாதிகளால் ஆபத்து ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பை பலப்படுத்த, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோவில் கிழக்கு, மேற்கு பிரதான வாசலில், மாநில சிறப்பு பாதுகாப்பு பிரிவு போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், பக்தர்களை தீவிர சோதனைக்கு பின், கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கின்றனர். நேற்று, ராமநாதபுரத்தில் இருந்து மேப்ப நாய் வரவழைக்கப்பட்டு, கோவில் மூன்று பிரகாரங்கள், நந்தி, சேதுபதி மண்டபம் உள்ளிட்ட பல இடங்களில், வெடிகுண்டு உள்ளதா என, போலீசார் சோதனை நடத்தினர். இதில், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் சிக்கவில்லை.