கிருபாபுரீஸ்வரர் கோவிலில்ரூ. 1லட்சம் உண்டியல் வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2013 11:03
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் உண்டியல் மூலம் 1 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்தது. திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் உண்டியல் நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், குருக்கள் ரவி, கணக்கர் அசோகன் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதில் 1 லட்சத்து இரண்டு ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர்.