ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி திருவிழா, நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து விரதமிருந்து நேர்த்தி செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டனர். பத்துநாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் ஆன்மிக சொற்பொழிவுகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 26ல் பங்கு உத்திர பெருவிழாவில் முருகனுக்கு பக்தர்கள் காவடி எடுத்தும் கண்ணத்தில் அலகு குத்தியும் முக்கிய வீதிகளில் ஊர்வமாக வந்து முருகன் கோயிலில் நேர்த்தி செலுத்துவர். அன்று இரவு ஏராளமான பக்தர்கள் கோயில் முன், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.