சென்னை: சென்னையில் இன்று மயிலாப்பூர், திருவான்மியூர், பாரிமுனை ஆகிய இடங்களில், அதிகார நந்தி வீதியுலா கோலாகலமாக நடக்க உள்ளது. சென்னையில், பல்வேறு சிவன் கோவில்களில் பங்குனி பெருவிழா துவங்கிஉள்ளது. அதில், மூன்றாம் திருநாளான இன்று, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், பாரிமுனை சென்னமல்லீஸ்வரர் ஆகிய கோவில்களில், இன்று அதிகாலை 6:00 மணிக்கு, அதிகார நந்தி வீதியுலா நடக்க உள்ளது.