Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏகாம்பரேஸ்வரர் கைலாசபீட ராவண வாகன ... பழநி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! பழநி பங்குனி உத்திர திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்திரசூடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் நடக்குமா?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 மார்
2013
10:03

ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீரை வெளியேற்றிய கவுன்சிலர், தற்போது வரை தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்காததால், 29ம் தேதி தெப்போற்சவம் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா இன்று துவங்குகிறது. வரும், 27ம் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது. 29ம் தேதி, 300 ஆண்டிற்கு மேல் பராம்பரியமாக நடக்கும் தெப்போற்சவம், சந்திரசூடேஸ்வர் கோவிலுக்கு சொந்தமான தேர்ப்பேட்டை தெப்பக்குளத்தில் நடக்கிறது. இந்த தெப்போற்சவத்தில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். கடந்த, 10 மாதம் முன், தெப்பக்குளத்தில் சாக்கடை நீர் கலந்து, சுகாதார சீர்கேடு அடைந்து தூர்நாற்றம் வீசியது. அப்பகுதி கவுன்சிலர் ரோஜா பாண்டியன், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தெப்பக்குளத்தை தூர்வாரி மீண்டும் தண்ணீர் விட்டு குளத்தை நிரப்புவதாக, ஹிந்து அறநிலையத்துறையில் அனுமதி பெற்று, குளத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றினார். அதன்பின், உள்ளூர் பிரச்சனையை காரணம் காட்டி, குளத்தை தூர்வாரவும், தண்ணீர் நிரப்பவும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது தேர்த்திருவிழா நெருங்கி விட்டநிலையில், ஓசூரில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு, மின்சார பற்றாக்குறையால் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப முடியவில்லை.

தேர்த்திருவிழா இன்று துவங்கும் நிலையில் வெளிமாநில, மாவட்ட மக்கள் ஓசூரில் உள்ள உறவினர்கள் வீடுகளில் குவிந்து வருகின்றனர். தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால், இந்த ஆண்டு பராம்பரியமாக நடக்கும் தெப்போற்சவம் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், அதிருப்தியடைந்த கோவில் பக்தர்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று மதியம் முன்னாள் நகராட்சி தலைவர்(பொ) மாதேஸ்வரன், பா.ஜனதா கவுன்சிலர் நாகராஜ், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வரதராஜ் ஆகியோர் தலைமையில் ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், சப்-கலெக்டர் பிரவீன் நாயரிடம், தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப கோரிக்கை மனு வழங்கினர்.

மனுவில் கூறியுள்ளதாவது: சந்திரசூடேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லை. தேர்திருவிழாவுக்கு வரும் பக்தர்கள், முடி காணிக்கை செலுத்தி, குளத்தில் நீராடுவர். வெளிமாநில பக்தர்கள், இந்த தெப்பக்குளத்தில் நீராடுவதை புண்ணியமாக கருதுகின்றனர். குளத்தின் அருகே கெலவரப்பள்ளி அணை நீர் குழாய் செல்கிறது. அந்த குழாயை திறந்தோ அல்லது தண்ணீர் லாரிகள் மூலமோ குளத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் துவங்கியது. தேரில் மீனாட்சி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இங்குள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar