Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கந்தசுவாமி கோவிலில் தகடுகள் ஏலம் கோதண்டராமர் கோவிலில் பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவா - விஷ்ணு கோவிலில் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2013
11:03

திருவள்ளூர்: சிவா - விஷ்ணு கோவிலில், ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.திருவள்ளூர், பூங்கா நகரில், சிவா - விஷ்ணு கோவில் மற்றும் ஸ்ரீஜலநாராயணன் சன்னிதி உள்ளது. இக்கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றது.இதையொட்டி, மூலவருக்கு காலை, 7:30 மணி முதல், 9:00 மணி வரை ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. மாலை, 5:30 மணி முதல், 6:30 மணி வரை ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் மற்றும் சுப்பிரமணிய சுவாமிக்கு அலங்காரம் நடைபெற்றது.மாலை, 7:00 மணிக்கு வாணவேடிக்கைகளுடன் மாடவீதி உலா நடைபெற்றது. இரவு, 8:00 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.இந்த வைபத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.திருத்தணிதிருத்தணி காந்தி நகரில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் தீ மிதி திருவிழா துவங்கியது.விழாவை முன்னிட்டு தினமும் காலை, 10:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. மதியம், 1:00 மணி முதல், மாலை, 5:30 மணி வரை சொற்பொழிவுவாளர் பார்த்திபனின் மகாபாரத சொற்பொழிவும். இரவு, 10:00 மணிக்கு நாடகமும் நடக்கிறது. நேற்று, காலை, 11:00 மணிக்கு கோவில் வளாகத்தில், திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அடுத்த மாதம், 7ம் தேதி தீ மிதி திருவிழா நடக்கிறது.ஆர்.கே.பேட்டைஆர்.கே.பேட்டை அடுத்த, சுந்தரராஜபுரம், காந்தகிரி மலைக்கோவிலில் எழுந்தருளிய அகத்தீஸ்வரர் கோவிலில் நேற்று காலை, 11:00 மணி திருக்கல்யாணம் நடந்தது. இக்கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு மேளதாளத்துடன் மலர் மாலை மற்றும் சீர்வரிசை பொருட்களுடன், கிராம மக்கள் ஊர்வலமாக மலைக்கோவிலுக்கு சென்றனர். அங்கு வேத விற்பன்னர்கள், மாந்திரங்கள் ஓத அகத்தீஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காணிக்கையை மொழிப் பணமாக பக்தர்கள் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 
temple news
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar