பதிவு செய்த நாள்
28
மார்
2013
11:03
ஆத்தூர்: ஆத்தூர் சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் பங்குனி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. ஆத்தூர் சோமசுந்தரி அம்மன் கோவில் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி அம்பாள் பல்வேறு சப்பரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 24ம் தேதி சிவப்பு சாத்தியும் 25ம் தேதி வெள்ளை மற்றும் பச்சை சாத்தியும் நடராஜருக்கு வழிபாடுகள் நடந்தது. திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதன்பின்பு சுவாமி அம்பாள் பெரிய தேருக்கு எழுந்தருளினார். சிறிய தேரில் விநாயகர் எழுந்தருளினார். தேரை பக்தி முழக்கங்களுடன் பக்தர்கள் இழுத்தனர். முற்பகலில் தேர் நிலையை அடைந்தது. கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், டவுன் பஞ்.,சேர்மன் முருகானந்தம், துணைச் சேர்மன் கண்ணன் (எ) ஆண்டியப்பன், நிர்வாக அதிகாரி முத்துக்கிருஷ்ணன், டவுன் பஞ்.,கவுன்சிலர் கிருபாகரன், அண்ணாமலை சுப்பிரமணியன், சோமசுந்தரி, கைங்கர்ய சபையைச் சேர்ந்த மூக்கன்சாமி, கோவில் மணியம் சரவணபவன், கணக்கர் பாலகிருஷ்ணன், ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கத் தலைவர் சதீஷ்குமார், ரவி அய்யர், தந்துரி ஈஸ்வரமூர்த்தி பட்டர், அதிமுக நகரச் செயலர் ராஜகோபால், அதிமுக விவசாய பிரிவு இணைச் செயலர் மணி, வி.ஏ.ஒ. வெங்கடேஷ், தொழிலதிபர்கள் உமரிக்காடு ரமேஷ், எம்.மணி, செல்வராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் தெப்பத் திருவிழாவும், சுவாமி இடப வாகனத்தில் திருவீதியுலா வருதலும் நடந்தது.