Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் வரிசையில் நீண்ட நேரம் ... சபரி வித்யாஷ்ரம் பள்ளியில் உலக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்ச்சகர்களை அரசு ஊழியராக்க வேண்டும்: பணியாளர்கள் கோரிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2013
11:03

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 38 ஆயிரம் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர், நிவேதனப் படையல்கள் தயாரிப்போர், பூசாரி, பகல், இரவு காவலர்கள், பணிப்பெண் உள்ளிட்ட, பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என, கிராம கோவில் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 13ம் தேதியிலிருந்து, 25ம் தேதி வரை, தமிழகம் முழுக்க, சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். பின், நிறைவு விழாவின் போது, 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் விவரம்: கோவில் பணியாளர்கள் அனைவரையும், அரசின் அடிப்படை ஊழியராக்க வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; மருத்துவ காப்பீடு வசதி செய்து தர வேண்டும்; கோவிலில், ஆகமம் பயின்று, 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு, விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். கிராமப்புறப் பகுதிகளில், வீடு இல்லாத அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தில், பயன்பெற, வழிவகை செய்து தர வேண்டும். கோவிலில் பணிபுரியும், அர்ச்சகர்கள் உள்ளிட்ட, பணியாளர்கள் அனைவருக்கும், பணிப்பதிவேடு பராமரித்து, குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

அரசு துறைகளைச் சேர்ந்த, ஊழியர் சங்கங்களை அழைத்து, குறை கேட்பது மற்றும் துறைரீதியான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க, தமிழ்நாடு கிராம கோவில் பணியாளர்கள் சங்கத்திற்கு, அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும். பல்வேறு துறைகளைச் சேர்ந்த, கலைஞர்கள், அரசு ஊழியர்கள், வல்லுனர்களுக்கு, அரசு விருது வழங்கி கவுரவிப்பது போல், ஆகமம் பயின்று கோவில்களில், 25 ஆண்டுகளாக, பூஜை செய்து வரும் அர்ச்சகர்கள், பூசாரிகளை விருது வழங்கி, கவுரவிக்க வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar