Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ... சக்திமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றதுடன் துவக்கம்! சக்திமாரியம்மன் கோயில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழைச்சோறு சேகரித்து வழிபாடு: வறட்சியை விரட்ட நூதனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2013
10:04

கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே மழை வேண்டியும், வறட்சியை விரட்டவும், மழைச்சோறு சேகரித்து, கோவிலில் நூதன வழிபாட்டை மக்கள் நடத்தினர்.கோபி அருகே ஓலபாளையம், சாணார்பாளையம், விரியன்காடு ஆகிய கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு, விவசாயமே பிரதான தொழில். சில ஆண்டாக, பருவமழை பொய்த்ததால், ஓலபாளையம், சாணார்பாளையம், விரியன்காடு பகுதி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.அப்பகுதிகளில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டதோடு, குடிநீர் பஞ்சமும் தலை விரித்தாடுகிறது.எனவே, மழை வேண்டி மழைசோறு சேகரித்து, இறைவனுக்கு படைத்து நூதன வழிபாட்டை, கிராம மக்கள் நடத்தினர். நூற்றுக்கணக்கான பொது மக்கள் ஒன்று கூடி, வீடு, வீடாக சென்று, கலயங்களில் பழையசோறு, கஞ்சிகளை சேகரித்தனர். சேகரிக்கப்பட்ட மழைச்சோற்றை, மேளதாளத்துடன், கஞ்சி பானையில் சுமந்தபடி, விநாயகர், மாரியம்மன் கோவில்களில் வைத்து வழிபட்டனர்.வழிபாடு முடிந்த பின், சேகரிக்கப்பட்ட பழைய கஞ்சிசோற்றை, விநாயகருக்கு ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. ஊர் கமிட்டி தலைவர் ஆண்டவர், செயலாளர் சதாசிவம், பொருளாளர் லட்சுமணன் ஆகியோர் கூறியதாவது:கடந்த பத்து ஆண்டுக்கு முன், ஓலபாளையம், சாணார்பாளையம், விரியன்காடு பகுதியில் வறட்சி நிலவியதால், மழைச்சோறு சேகரித்து மக்கள் வழிபட்டனர். சில தினத்திலேயே, மழை வந்ததால், தற்போதும் ஏற்பட்ட வறட்சியை விரட்ட, மழைச்சோறு சேகரித்து வழிபாடு நடத்தினோம்.வழிபாட்டின்போது, சுவாமி ஆடிய இரு சிறுமிகள், "இருதினத்தில் மழை வரும், என, வாக்கு தெரிவித்தனர். எனவே, ஓரிரு தினத்தில் மழை வரும் என எதிர்பார்க்கிறோம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar