பதிவு செய்த நாள்
02
ஏப்
2013
10:04
சிவகாசி: திருத்தங்கல் சக்திமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் திருவிழாவில் அம்மன் சிம்ம வாகனத்திலும், 2ம் நாள் கஜலட்சுமி அவதாரத்தில் வீதி உலா வந்தார்.பத்து நாட்கள் திருவிழாவிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அம்மன் சிவபூஜை அவதாரம், தனலட்சுமி அவதாரம், தபசுகாட்சி, காளிங்கன் அவதாரங்களில் உலா வருகிறார். பக்தர்கள் நேர்த்திக்கடனாக மாவிளக்கு, பொங்கல், முளைப்பாரி, அக்னி சட்டி எடுத்தல், முடி காணிக்கை, தவழும் பிள்ளை என நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். 10ம்தேதி வரை பங்குனி பொங்கல் விழா கொண்டாடப்படுவதால் தினமும் இரவு கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. கண்காட்சி: திருவிழாவையொட்டி திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.,மெட்ரிக் பள்ளியில் உறவின் முறையினரால் வீட்டு உபயோக பொருள் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியயை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார். இந்து நாடார் உறவின் முறை தலைவர் பாக்கியம், செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் மாணிக்கம், தர்மகர்த்தா அண்ணாமலைச்சாமி, பள்ளி தாளாளர் கணேசன், துணை தலைவர் குருசாமி, துணை செயலாளர் சத்திய மூர்த்தி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.