பதிவு செய்த நாள்
02
ஏப்
2013
11:04
நித்திரவிளை: கொல்லங்கோடு பத்ர காளி அம்மன் கோயில் மீனபரணி தூக்கத் திரு விழா நாளை (3ம் தேதி) துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் விழாவில் காலை பள்ளியுணர்த்தல், கணபதிஹோமம், ஏழு மணிக்கு பிரதான கோயிலில் மேளதாளங்களுடன் கொடிமரம் வெங்கஞ்சி கோயிலுக்கு கொண்டு வருதல், மதியம் அன்ன தானம், மாலை தாலப் பொலி, பஞ்சவாத்தியம், செண்டைமேளம், சிங் காரிமேளம், நாதஸ்வரம், நையாண்டி மேளம், யானை அணி வகுப்பு டன் அம்மன் எழுந்தரு ளல் நடக்கிறது. கண்ணனாகம், ஸ்ரீதேவி பள்ளி, கீழ் வீட்டு நாகராஜா காவு, இளம்பால முக்கு, மகா தேவர் சன்னதி ஆகிய இடங்களில் பூஜைகள் நடைபெற்று, அம்மன் வெங் கஞ்சி கோயிலுக்கு எழுந்தருளுவார். மாலை திருக்கொடி ஏற்றுதல் நடக்கிறது. துவக்க விழா விற்கு கோயில் கமிட்டி தலைவர் வக்கீல் ராமச் சந்திரன் தலைமை வகிக் கிறார். திருவனந் தபுரம் சாந்தி கிரிஆசிரம சுவாமி குருரத்னம் ஞான தபசி குத்துவிளக்கு ஏற் றுகிறார். மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சசி தரூர், அமைச்சர் பச்சை மால், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், ஜாண் ஜேக் கப், எம். எல்.ஏ., கொல் லங்கோடு பஞ்., தலை வர் அருளானந்தன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை கேரள அறநிலையத்துறை மற் றும் சுகாதாரத்துறை அமைச்சர் சிவகுமார் துவங்கி வைக்கிறார். விழா நாட்களில் தினமும் பள்ளியுணர்த் தல், நிர்மால்ய தரிசனம், அபி ஷேகம், கணபதி ஹோ மம், தீபாராதனை, அன்ன தானம், மற்றும் கலை நிகழ்ச்சி நடக் கிறது. மூன்றாம் நாள் விழா வில் காலை தூக்க நேர்ச்சை பதிவு செய்யப் படுகிறது. நான்காம் நாள் விழாவில் காலை தூக்கம் எழுதி நிறுத்தல், தூக்க நேர்ச்சை குலுக்கல் நடக்கிறது. இரவு தூக்கக் காரர்கள் நீராடி விட்டு பிரதான கோயிலுக்குச் சென்று, விநாயகருக்கு தேங்காய் உடைத்து வெங்கஞ்சி கோயிலில் நமஸ்காரம் செய்தல் நடக்கிறது. தொடர்ந்து ஐந்து நாட்கள் தூக்கக் காரர்கள் காலை ஆறு மணி, மாலை ஐந்து மணி ஆகிய இரு வேளை களில் தினமும் நமஸ்காரம் செய்கின்றனர். ஒன்பதாம் நாள் விழாவில் வண்டி யோட்டம் நடக்கிறது. பிற்பகல் மூன்று மணிக்கு தூக்கக்காரர்கள் பூஜாரியுடன் வள்ளவிளை கடலில் நீராடி பஞ்சகவ்ய முழுக்கல், கலச பூஜைக் குப் பின், பூரண கும்பத் துடன் கோயிலை வந் தடைகின்றனர். மாலை ஆறு மணிக்கு வண்டி யோட்டம் நடக்கிறது. பத்தாம் நாள் விழா வில் காலை ஆறு மணி முதல் பக்தி பரவச மூட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க தூக்க நேர்ச் சை நடக்கிறது. ஏற்பாடு களை கோயில் கமிட்டி தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் மோகன் குமார் மற்றும் நிர்வாகி கள், உறுப்பினர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.