பதிவு செய்த நாள்
02
ஏப்
2013
11:04
குன்னூர்: குன்னூர் அருகேயுள்ள பழத்தோட்டம் செல்வகணபதி கோவில், கும்பாபிஷேக விழா வரும் 7ம் தேதி நடக்கிறது.குன்னூர் அருகே உபதலை காந்திநகர் செல்வகணபதி கோவிலில், மகா கும்பாபிஷேக விழா, வரும் 5ம் தேதி துவங்கவுள்ளது. அன்று காலை 6:00 மணிக்கு, புனித தீர்த்தங்கள் அழைப்பு, புற்றுமண் எடுத்து வருதல், முளைப்பாரி அழைப்பு, கலைமகள், அலைமகள், மலைமகள் வழிபாடு உட்பட வழிபாடுகள் நடத்தப்படவுள்ளன. வரும் 6ம் தேதி மாலை 6:00 மணி முதல், இரண்டாம் கால வேள்வி பூஜையில், சூரிய சந்திர வழிபாடு, எண் திசை காவலர் வழிபாடு உட்பட சிறப்பு பூஜைகள் நடத்தப்படவுள்ளன. 7ம் தேதி காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை, மூன்றாம் கால வேள்வியும் ஆகியவை நடத்தப்படுகிறது. மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் பாபு, செயலர் அண்ணாதுரை, பொருளாளர் ஆறுமுகம் உட்பட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.