கொல்லங்கோடு பத்திரகாளி கோயிலில் தூக்கத்திருவிழா தொடக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2013 10:04
நாகர்கோவில்: கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் தூக்கத்திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் திருவிழா. இங்கு பங்குனி மாதம் தூக்கத்திருவிழா நடைபெறுகிறது. இதற்காக நேற்று வெங்கஞ்சி கோயிலிலிருந்து தேவி தூக்கத்திருவிழா நடைபெறும் திடலுக்கு வாத்ய மேளம் முழங்க எழுந்தருளினார். தொடர்ந்து இரவு ஏழு மணிக்கு கொடியேற்று நடைபெற்றது. வரும் 12-ம் தேதி பிரசித்தி பெற்ற தூக்கத்திருவிழா நடைபெறுகிறது. குழந்தை வரம் வேண்டியவர்கள் தங்கள் குழந்தைகளை தூக்கமரத்தில் ஏற்றும் நிகழ்ச்சியாகும். 60 அடி உயர தூக்க மரத்தில் தூக்ககாரர்கள் குழந்தையுடன் கோயிலை வலம் வரும் நிகழ்ச்சியாகும். 13-ம் தேதி ஆராட்டு நடைபெறுகிறது.