Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமாயணம் பகுதி - 22 ராமாயணம் பகுதி - 24 ராமாயணம் பகுதி - 24
முதல் பக்கம் » இதிகாசங்கள் » ராமாயணம்
ராமாயணம் பகுதி - 23
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஏப்
2013
05:04

தசரதரை அழைத்துக்கொண்டு கவுசல்யா ஊருக்குள் திரும்பினாள். அயோத்தி நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தெய்வம் இல்லாத இடத்தில் கோயிலுக்கு வேலை இல்லை என்பது போல எல்லா கோயில்களுமே மூடப்பட்டிருந்தன. தசரதர் புலம்பியபடியே கவுசல்யாவுடன் சென்றார். நான் இனிமேல் கவுசல்யாவுடன்தான் இருப்பேன். என் கண்கள் இருண்டுபோய்விட்டன. அறுபதாயிரம் ஆண்டுகள் தவமிருந்து ஒரு புதல்வனைப் பெற்றேன். அவன் இங்கிருந்து போய்விட்டான். அவனோடு என் கண்களும் போய்விட்டன. அவனது அழகு அத்தகையது. போன கண்கள் திரும்பிவராது. அவனைப் பார்க்கும் பாக்கியம்தான் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால், அவனைப் பெற்ற தாயான உன் மடியில் தலை சாயும் பாக்கியமாவது கிடைக்கட்டும். நீண்ட நாட்கள் நான் உயிர்வாழமாட்டேன். இப்போது உன்னையும் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் என் கண்கள் என்னிடம் இல்லை. என் உணர்ச்சிகள் அனைத்துமே அவனோடு போய்விட்டன. இனியும் நீ என் மீது சந்தேகப்படாதே. கைகேயியின் மீது பாசம் கொண்டு அவனை நான் காட்டிற்கு அனுப்பிவிட்டதாக கருதாதே. தெரியாமல் செய்த பிழைக்காக என்னை மன்னித்துவிடு. என் கைகளைப் பற்றிக்கொள், என்று புலம்பி தீர்த்தார்.

அருகிலேயே கைகேயியும் வந்துகொண்டிருந்தாள். அடப்பாவி! என் ராமன் இல்லாமல் ஒரு கணம் கூட வாழமாட்டேன். நீ என்னை கொன்றுவிடு. கைம்பெண்ணாக இருந்து இந்த நாட்டை ஆண்டுகொண்டிரு. உன் இஷ்டப்படியெல்லாம் நடந்துகொள், என்றெல்லாம் திட்டித் தீர்த்தார். அயோத்தி நகரில் இருந்த பெரும்பகுதி மக்கள் ராமனின் தேரைத்தேடி ஊரைவிட்டே போய்விட்டார்கள். வயதானவர்களும், ஊனமுற்றவர்களும் தேரைத் தொடர வழியில்லையே என கவலையோடு அவரவர் வீட்டு வாசலில் சாய்ந்து கிடந்தனர். ராமனை பின்தொடர்ந்து லட்சுமணனையும், சீதையையும் தவிர யாராலும் செல்ல முடியவில்லை. சகோதர பாசத்திற்கு லட்சுமணன் ஒரு உதாரணம். அவனுக்கு மட்டுமே காட்டுக்குப் போகும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. லட்சுமணன் பிறந்தவுடன் நடந்த ஒரு சம்பவத்தை கவனிக்க வேண்டும். ராம சகோதரர்கள் பிறந்தவுடன் வரிசையாக தொட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தனர். முதல் தொட்டிலில் ராமன், அடுத்து பரதன், அடுத்து லட்சுமணன், அதையடுத்து சத்ருக்கனன் படுத்திருந்தனர். பெயர்சூட்டு விழா நடந்தது. ராமனுக்கு இணையானவர் என்ற காரணத்தால் லட்சுமணனுக்கு இளைய பெருமாள் என பெயர் சூட்டப்பட்டது. பரத கண்டத்தை ஆளப்போகும் குழந்தைக்கு பரதன் என பெயர் சூட்டப்பட்டது. சத்ருக்களை நாசம் செய்யும் குழந்தைக்கு சத்ருக்கனன் என்ற பெயர் சூட்டப்பட்டது. திவ்வியமான பெயரான ராமச்சந்திரன் என்ற பெயர் முதல் குழந்தைக்கு சூட்டப்பட்டது.

பெயர் சூட்டு விழா முடிந்ததும் மூன்றாவது தொட்டிலில் இருந்த லட்சுமணன் அழ ஆரம்பித்தான். அழுகைக்கான காரணம் யாருக்கும் புரியவில்லை. குழந்தைக்கு பசிக்கிறதோ என சுமித்ரா பாலூட்டிப்பார்த்தாள். குழந்தை அடங்கவில்லை. பூச்சி கடித்திருக்கலாமோ என வஸ்திரங்களை எல்லாம் உதறிப்பார்த்தார்கள். எதுவுமே இல்லை. அப்போது வசிஷ்டர் வந்தார். அவரிடம் விஷயம் தெரிவிக்கப்பட்டது. அவர் குழந்தையை ஆழ்ந்து கவனித்தார். குழந்தையின் பார்வை முதல் தொட்டிலை நோக்கி இருந்தது. அவருக்கு புரிந்துவிட்டது. இந்த பொடிப்பயல் அண்ணன் அருகே இருக்க வேண்டும் என நினைக்கிறான். அவனை இரண்டாவது தொட்டிலில் போடுங்கள். பரதனை மூன்றாவது தொட்டிலில் போட்டுவிடுங்கள். அழுகை அடங்கிவிடும், என்றார். அவ்வாறே செய்யப்பட்டது. ஆனாலும் லட்சுமணன் அழுகையை விடவில்லை. வசிஷ்டருக்கு மற்றொரு பொறி தட்டியது. இவனை ராமன் படுத்திருக்கும் அதே தொட்டிலில் போட்டுவிடுங்கள், என்றார். அப்படியே சுமித்ரா ராமனின் அருகில் லட்சுமணனை போட்டாள். அப்போது ராம குழந்தை லட்சுமணனின் மீது ஏறி படுத்தது. குழந்தை நசுங்கிவிடுமே என எல்லாரும் பயந்தார்கள். அதன் பிறகுதான் லட்சுமணன் அழுகையை விட்டார். பாற்கடலில் பரந்தாமனை தாங்கியிருக்கும் ஆதிசேஷன்தான் லட்சுமணனாக அவதாரம் எடுத்துள்ளார். எனவே யாரும் கவலைப்பட வேண்டாம். லட்சுமணனுக்கு ஏதும் ஆகாது என்றார் வசிஷ்டர்.

அந்த அளவுக்கு சகோதர பாசம் பொங்கி வழிந்த குடும்பம் ராமனின் குடும்பம். அந்த சகோதரனைப் பிரிந்து ஒரு கணம் கூட இருக்க முடியாது என்பதால் லட்சுமணன் ராமனோடு போய்விட்டார். அந்த பாசமலர்கள் காட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தன. இதற்கிடையே அயோத்தியில் இரவு நேரம் ஆரம்பித்தது. தசரதரும் மற்ற தேவியரும் எதுவுமே சாப்பிடாததால் கிறங்கிப் போயிருந்தனர். கவுசல்யா இதுதான் சமயம் என தசரதரை பிடித்துக்கொண்டாள். அன்பரே! இந்த கைகேயி பாம்பைப் போன்றவள். என் ராமனை தீண்டிவிட்டாள். ஒரு வீட்டிற்குள் பாம்பு இருந்தால் அதற்குள் மனிதர்கள் வசிக்க முடியாது. இப்போது ராமனை தீண்டியதுபோல் அடுத்து என்னை தீண்ட ஆரம்பிப்பாள். உங்களுக்கு கொஞ்சம்கூட முன்யோசனை இல்லை. பரதனுக்கு தாராளமாக நாட்டை கொடுத்திருக்கலாம். ஆனால் என் மகனை காட்டிற்கு அனுப்பவேண்டிய அவசியம் என்ன? ஒரு வேளை பரதனாலோ, கைகேயியாலோ அவனுக்கு கேடு நேரும் என்றாலும்கூட அவனை அடக்கி வைத்திருக்க மாட்டேனா? நான் சொன்னதை அவன் தட்டாமல் கேட்பானே. இந்நேரம் என் மகன் காட்டிற்குள் புகுந்திருப்பான். அவன் ஒரு இளைஞன். திருமணமாகி சில காலம்தான் ஆகிறது. அந்த பெண் சீதை என்ன பாவம் செய்தாள்? அவர்கள் சந்தோஷமாக வாழ வேண்டிய காலத்தில் காட்டில் கிடைக்கும் கிழங்குகளை புசித்துக்கொண்டு அங்கேயே தங்க வேண்டுமென்ற அவசியம் என்ன? காட்டுக்குள் மிருகங்கள் நடமாடுமே. அரக்கர்களின் தொல்லை அதிகமாயிருக்குமே. இந்த ஊர் இனிமேல் எக்காரணம் கொண்டும் முன்னேறாது. ஒவ்வொரு மாதமும் பெய்யும் மழை நிச்சயமாய் பெய்யாது. கன்றை இழந்த பசு எப்படியெல்லாம் தவிக்குமோ அதே போல என் ஒரே மகனை பிரிந்து தவிக்கிறேன். இவ்வுடலில் இனி உயிர் தங்காது, என்று அழுதாள். அவளை சுமித்ராதேவி சமாதானப்படுத்தினாள்.

சகோதரி! கலங்காதே. வெகு விரைவில் ராமன் வந்துவிடுவான். நிச்சயமாய் அரச பதவியை ஏற்பான். நீதான் குடும்பத்தில் மூத்தவள். நீயே இப்படி புலம்பிக் கொண்டிருந்தால் மற்றவர்களின் கதி என்னாவது? நம் கணவனை சபித்து ஆகப்போகும் பலன் என்ன? மேகக்கூட்டம் மழை பொழிவதுபோல் நீயும் ஆனந்தக்கண்ணீர் விடும் காலம் விரைந்து வந்துகொண்டிருக்கிறது. ராமன் புரு÷ஷாத்தமன். அவன் சீதாதேவி, பூதேவி, விஜயலட்சுமி என்ற தனது பட்டமகிஷிகளோடு விரைவில் பட்டாபிஷேகம் காண்பான், என்று தேற்றினாள். இதைக்கேட்டபிறகு கவுசல்யாவுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. இதற்குள் ராமனின் ரதத்தை பின்தொடர்ந்து சென்ற மக்கள் ஒரு இடத்தில் ரதம் நிற்பதை கண்டார்கள். ராமபிரான் ரதத்திலேயே அமர்ந்திருந்தார். தன் பின்னால் ஓடிவந்த மக்கள் கூட்டத்தை கவனித்துவிட்டார்.—தொடரும்.

 
மேலும் இதிகாசங்கள் ராமாயணம் »
temple news

ராமாயணம் பகுதி-1 நவம்பர் 08,2010

தெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. ... மேலும்
 
temple news

ராமாயணம் பகுதி-2 நவம்பர் 08,2010

குழந்தை இல்லாத கவலை தசரதரை மிகவும் வாட்டியது. அவருக்கு கவுசல்யா என்ற அன்புமிகுந்த மனைவி முதலில் ... மேலும்
 
temple news

ராமாயணம் பகுதி-3 நவம்பர் 08,2010

தசரத சக்கரவர்த்தி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போனார். தாயார்கள் தங்கள் செல்லக் குழந்தைகளை பார்த்து ... மேலும்
 
temple news

ராமாயணம் பகுதி-4 நவம்பர் 13,2010

தசரதரின் முன் வந்து நின்ற அந்த இளைஞன் வேறு யாருமல்ல... லட்சுமணன் தான்... தம்பி உடையான் படைக்கு அஞ்சான் ... மேலும்
 
temple news

ராமாயணம் பகுதி-5 நவம்பர் 13,2010

அந்த அழகு விழிகளை ராமனின் கண்களும் சந்திக்கத் தவறவில்லை. அந்த நீலவண்ணக் கண்ணைக் கொண்டவன், அவளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar