பதிவு செய்த நாள்
06
ஏப்
2013
10:04
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில், ஏப் 5, காலை சேஷ வாகன உற்சவம் நடந்தது. காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில், பங்குனி பிரம்மோற்சவம், கடந்த 2ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் மாலை, வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. நான்காம் நாள் திருவிழாவான, ஏப் 5, காலை 6:00 மணிக்கு, சேஷ வாகனத்தில், ஸ்ரீபரமபத நாதன் திருக்கோலத்தில் பெருமாள் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளை வலம் வந்தார். மாலை 6:00 மணிக்கு சந்திர பிரபை உற்சவம் நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு, தங்க பல்லக்கில், பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 6:00 மணிக்கு யாளி வாகன உற்சவம் நடைபெறும்.