பதிவு செய்த நாள்
06
ஏப்
2013
10:04
ஈரோடு: ஈரோடு பகுதி மாரியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு, ஏப் 5, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் விழா, மார்ச், 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஈரோடு, பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களில், தினமும் பக்தர்கள் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி, நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.நூற்றுக்கணக்கன பக்தர்கள், அக்னி சட்டி எடுத்தும், பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கோயில் வளாகத்தில், பக்தர்களுக்கு, அன்னதானம், டிபன், பொங்கல், நீர்மோர் வழங்கப்படுகிறது.ஈரோடு நகரம், கருங்கல்பாளையம், குமலன்குட்டை, சம்பத் நகர், கிருஷ்ணம்பாளையம், நாட்ராயன் கோயில், 41வது வார்டு, பெரியார் நகர், அண்ணா நகர், மணல்மேடு ஆகிய பகுதிகளில் உள்ள எல்லை மாரியம்மன், வேப்பிலை மாரியம்மன் கோயில்களில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அன்னதான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.மணல்மேடு எல்லை மாரியம்மன் கோயில் தலைவர் பழனிசாமி, மாநகர, மாவட்ட அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.