திருக்கனூர்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் வரும் 23ம் தேதி நடக்கிறது.திருக்கனூர் அடுத்த கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாகடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் காலை, மாலையில் அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. வரும் 23ம் தேதி காலை 11.30 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.25ம் தேதி காலை 11 மணிக்கு தேர்த் திருவிழா, 26ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.