மாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் மீது நடந்து சென்ற பூசாரி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2013 11:04
கிருஷ்ணகிரி: தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருவிழாவையொட்டி, ஆந்திரா மாநில எல்லையோரம் உள்ள சிந்கம்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடந்தது.நேற்று முன்தினம் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனையடுத்து, அலங்கரிக்கப்பட்ட பூங்கரத்தை பூசாரி தலையில் சுமந்து வீடு, வீடாக சென்றார். அப்போது ஒவ்வொரு வீட்டிலும் கரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஒரு சிலர் வேண்டுதலை நிறைவேற்ற ஆடுகளை பலியிட்டனர்.இதனையடுத்து, கோவில் வளாகத்தில் குழந்தை வரன் வேண்டி, திருமணம் நடக்க வேண்டி மற்றும் பல்வேறு பிரச்னைகளை தீர்க்க வேண்டி ஆண்கள், பெண்கள் வரிசையாக ஈரத்துணியுடன் படுத்திருந்தனர்.அப்போது, கரகம் எடுத்து வந்த பூசாரி அருள் வந்து படுத்திருந்த பக்தர்கள் மீது ஏறி நடந்து சென்றார். பூசாரி பாதம் படும்பவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனையடுத்து தீமிதி விழாவும், ஜாட்டையால் அடித்து பேய் ஓட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.ழாவையொட்டி சிந்தகம்பள்ளி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவி விளையாடினர். விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர்.