Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருநாகேஸ்வரத்தில் ரூ.1.42 கோடியில் ... பழநி பெருமாள் கோயிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயாறப்பர் கோவிலில் சித்திரை பெருவிழா கோலாகல துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2013
11:04

தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்துள்ள திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக துவங்கியது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர். தஞ்சை மாவட்டம், திருவையாறில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். நடப்பாண்டும், இவ்விழா இம்மாதம் 28ம் தேதி வரை நடக்கிறது. சித்திரை பெருவிழா துவக்கத்தையொட்டி நேற்று கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 20ம் தேதி தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சியும், ஆறு கிராமங்களிலிருந்து கோவிலுக்கு ஊர்வலம் வந்து, சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி தேரோட்டமும், ஐயாறப்பர் ஸ்வாமி, அறம் வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்சமூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளில் உலா வருதல், தேர் நிலையடி வந்து சேர்ந்தவுடன் காவிரியாற்றில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் பக்தர்களுக்கு வியாபாரிகள் சார்பில் நீர்மோர் வழங்கப்படுகிறது.

வரும் 27ம் தேதியன்று, சப்தஸ்தான பெருவிழாவில் ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு, திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய கிராமங்களுக்கு சென்று, தில்லை ஸ்தானத்தில் ஆறு பல்லக்குகளும் சங்கமிக்கிறது. தொடர்ந்து, 28ம் தேதியன்று, தில்லை ஸ்தானம் பல்லக்குடன் ஏழு கிராம பல்லக்குகளும் திருவீதியுலா வந்து, தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீன கட்டளை விசாரணை குமாரசாமி தம்பிரான் ஸ்வாமிகள் தலைமையில், கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar