Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீழ்சேவூர் ஈஸ்வரன் கோவில் ... காளியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
600 ஆண்டு பழமையான புராதன கோவில்: ரூ.1 கோடி மதிப்பில் திருப்பணிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2013
11:04

சங்ககிரி: சங்ககிரியில், 600 ஆண்டு சிறப்பு வாய்ந்த சவுந்திரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில், முதல் முறையாக, ஒரு கோடி ரூபாய் மதிப்பில், 90 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டும் திருப்பணி நடந்து வருகிறது. சங்ககிரியில், சவுந்திரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவில் உள்ளது. 600ஆண்டு பழைமை வாய்ந்த இக்கோவில், அன்றைய மன்னர்கள், வழிப்பாடு நடத்துவதற்காக, போர்கால அடிப்படையில், கோபுரம் இன்றி, கோவில் கட்டப்பட்டதாக, வரலாற்று சான்றுகள் உள்ளன. தற்போது, இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது. இங்கு, மூலவராக காட்சியளிக்கும், சோமேஸ்வரர், சவுந்திரநாயகி தாயார் மற்றும் முருகபெருமான் ஆகியோர் ஒருசேர கிழக்கு திசைநோக்கி காட்சியளிப்பது சிறப்பம்சம். கோவிலின் தல விருட்சமாக நாகவள்ளி மரம் அமைந்துள்ளது. அதோடு, நீலாதேவி தாயாருடன், சனிபகவான் ஒருசேர அமர்ந்து, சந்தோஷ சனிபகவான் பெயரில் அருள்பாலிப்பது தனி சிறப்பாகும். கால பைரவருக்கு தனி சன்னதி உண்டு. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில், சஷ்டி, கிருத்திகை, பவுர்ணமி, பிரதோஷம், அஷ்டமி, நவமி வழிப்பாடு, ஆண்டுதோறும் நடந்து வருகிறது. எனினும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், காலபோக்கில், மெல்ல, பொலிவிழந்தது. எனவே, கோவிலை புனரமைத்து, கோபுரம் அமைக்க, பக்தர்கள் ஒருசேர முடிவு செய்தனர். அதற்காக, நிதி வசூலித்து, உபயதாரர்கள் தரப்பில் கோபுரம் அமைப்பதற்கான திருப்பணிகள், 2010 ஜூன், 4ல் துவங்கப்பட்டது. மொத்தம் ஒரு கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து நிலைகளை கொண்டு, 90 அடி உயரத்தில் கோபுர கட்டுமான திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பணிக்குழு தலைவர் சதாசிவம் கூறியதாவது: கோவிலில், 90 அடி உயரத்தில் கோபுரம் அமைக்கும்பணி, உபயதாரர் மூலம் நடந்து வருகிறது. கோபுர திருப்பணிக்கு மட்டும், 91 லட்சம் செலவிடப்படுகிறது. 600 ஆண்டு பழையமான இக்கோவில், பக்தர்கள் தீவிர முயற்சியால், திருப்பணி நடந்து வருகிறது. திருப்பணிக்கு உதவி செய்வோர், 98427-66599 என்கிற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar