கிருமாம்பாக்கம்: ரெட்டிச்சாவடி அடுத்த, மதலப்பட்டு, மதுரா சிவனார்புரம் கிராமத்தில், அங்காளபரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள், கடந்த 29ம் தேதி காலை 9 மணிக்கு, விக்னேஸ்வரை பூஜையுடன் துவங்கியது. மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை 9.30 மணிக்கு கலசம் புறப்படாகி, மூலவர் முத்துமாரியம்மன் சிவனாண்ட அங்காளபரமேஸ்வரி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கு, சுவாமி வீதியுலா நடந்தது. இன்று மாலை 6 மணிக்கு மண்டலாபிஷேக பூஜை துவங்குகின்றன.