பதிவு செய்த நாள்
02
மே
2013
11:05
சுங்குவார்சத்திரம்: நந்திமேடு ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில், மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.சுங்குவார்சத்திரம் அடுத்த, நந்திமேடு கிராமத்தில், ஆதம்பாக்கம் டி.ஏ.வி., பள்ளியின் கிளைப் பள்ளி அமைந்து உள்ளது. இப்பள்ளி வளாகத்தில், 16 கணபதிகளுடன் கூடிய, ஸ்ரீ விஜயகணபதி ஆலயம் அமைக்கப்பட்டது. இவ்வாலயத்தில், மகா கும்பாபிஷேகம் கடந்த, 28ம் தேதி, காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது.கடந்த, 29ம் தேதி, காலை, 9:00 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமம் நடத்தப்பட்டு, புதிய பிம்பங்களுக்கு சுத்தி கண் திறந்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை, இரண்டாம் கட்ட பூஜையும், இரவு, மூன்றாம் கட்டயாக சாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு, பூர்ணாஹூதி பூஜையுடன், கலச புறப்பாடு நடைப்பெற்றது.காலை, 9.30 மணிக்கு, விமான கும்பாபிஷேகமும், அதனைத் தொடர்ந்து, 10:00 மணிக்கு, மூலவர் ஸ்ரீ விஜய கணபதிக்கும், ஷோடச கணபதிக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது.