வேலாயுதம்பாளையம்: புன்செய் தோட்டக்குறிச்சி காவேரி ஆற்றங்கரை மலையம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிப்பட்டனர். பிரசித்தி பெற்ற மலையம்மன் கோவிலில், சித்திரை திருவிழாவுக்காக, கடந்த 20ம் தேதி காப்புக்கட்டுடன் விழா துவங்கியது. தொடர்ந்து நான்கு நாட்கள் ஸ்வாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் மஹா ஆராதனை நடந்தது. தேர் அலங்காரம் மற்றும் தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிறகு, தோட்டக்குறிச்சி பிள்ளையார் கோவில் முன்பு தேர் நிறுத்தப்பட்டடு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மலையம்மன் கோவிலுக்கு தேர்வந்த பிறகு, பக்தர்கள் பொங்கல் வைத்து ஸ்வாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.