பதிவு செய்த நாள்
02
மே
2013
11:05
உடன்குடி: உடன்குடி அருகே சீர்காட்சி பத்திரகாளியம்மன் கோ யில் கும்பாபிஷேக விழா துவங்கியது. இன்று (மே, 2) மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது. உடன்குடி அருகே சீர்காட்சியில் ஏழாயிரம் பண்ணை எட்டாம் கூட்ட நாடார் பெரு மக்கள், சீர்காட்சி ஊர் பொது மக்களுக்கு பாத்தியப்பட்ட பத்திர காளியம்மன் கோயில் அப்பகுதியில் பிரசித்திப் பெற்றது. இக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா (ஏப்.29ம் தேதி) மாலை விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாஜனம், பஞ்சகவ்யம், கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது. விழாவில் இன்று (மே 2ம்) தேதி காலை திராவிட கானம், வேதபாராயணம், காலை 5.30 மணிக்கு விஷேட சந்தி, பூத சுத்தி, யாகசாலை, பூர்வாங்க பூஜை, விக்னேஷ்வர பூஜை, தீபலெஷ்மி பூஜை, புண்யாக வாஜனம், பஞ்சகவ்யம், எஜமான் அனுக்ஞை, காலை 6 மணிக்கு மூர்த்தி ரக்ஷா பந்தன பூஜை, கிருத்திகா, ரோகினி சோம கும்ப பூஜை, துவாத பாலிகை பூஜை, நான்காம் காலயாக சாலை, தோரண பூஜை, மண்டப பூஜை, ஸப்த விம்சதி கலச பூஜை, சதுக்துவார பூஜை, ஸ்தம்ப பூஜை, பஞ்சாசன பஞ்சமா வர்ண பூஜை, சதுர்வேத கும்ப பூஜை, யாக யாகீஸ்வரி கலச பூஜை, அக்னி காரியம், நான்காம் கால யாகசா லை அஸ்த்திர ஹோமம், காலை 6.30 மணிக்கு ஸ்பரிசாகுதி, நைனோல் மீலினம், தத்துவா அர்ச்சனை, தகதரிசனம், காலை 7 மணிக்கு த்ரவ்யாகுதி, வஸோந்தாரா ஹோமம், வஸ்ர்த்ராகுதி, பூர் ணாகுதியாக தீபாரா தனை சம்யோஜனம், பலிபூஜை, யாக ரக்ஷா பந்தனம், விஷர்சனம், ஷோடச உபசாரம், புஷ்பார்ச்சனம், மந்திர புஷ்பம், சது ர்வேதம், திராவிட கானம், ராகமாலிகா, ஆசீர்வாதம், வாழ்த்து, தீபாராதனை, காலை 7.30 மணிக்கு யாத்ரா தானம், கோபூஜை, யாத்ரா தானத்துடன் கடம் புறப்பாடு, காலை 7.35 மணி முதல் காலை 8.22 மணிக்குள் விமான கோபுர அபிஷேகமும், மூலஸ்தான மூர்த்தி மற்றும் பரிவார தெய் வங்களுக்கு அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதில் சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொள்வார்கள். காலை 10 மணிக்கு மஹா த்ரவ்ய அபிஷேகம் மற்றும் அலங்காரமும், பகல் 12 மணிக்கு மகேஸ்வர பூஜையும், ப்ரசன்ன பூஜையும், அலங்கார தீபாராதனையும், பகல் 1 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பகவதி சேவை, திருவிளக்கு பூஜை, மூர்த்தி அர்ச்சனை, மந்திர புஷ்பம், மஹா புஷ்பாபிஷேகம், ஷோட்ச தீபாராதனையும், அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை ஏழா யிரம்பண்ணை எட் டாம் கூட்ட நாடார் பெருமக்கள், சீர்காட்சி ஊர்பொதுமக்கள் ஆகி யோர் செய்து வருகின்றனர்.