Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அபூர்வ ... மழை பெய்ய வேண்டி கழுதைக்கு திருமணம்! மழை பெய்ய வேண்டி கழுதைக்கு திருமணம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்னிபுரீஸ்வரர் கோவில் பராமரிப்பில் அலட்சியம்: பக்தர்கள் வேதனை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 மே
2013
11:05

திருக்கழுக்குன்றம்: வழுவதூர், அக்னிபுரீஸ்வரர் கோவில், போதிய பராமரிப்பின்றி சீரழிந்து வருவதால், புனரமைத்து, பூஜை நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருக்கழுக்குன்றம் அடுத்த வழுவதூர் கிராமத்தில், பழமை வாய்ந்த அக்னிபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். இதற்கான சான்று, கோவில் கருவறையின் பின்புற சுவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.சிறப்புகோவிலின் நுழைவு வாயில் "பா வடிவில் உள்ளது. மூலவர் அக்னிபுரீஸ்வரர், கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். எதிரே, நந்தி மண்டபம் உள்ளது. இடது புறத்தில், அம்மன் சன்னிதியும், கோவிலை ஒட்டி திருக்குளமும் அமைந்துள்ளன. இங்கு, சிவராத்திரி, பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக நடந்து வந்தன. இந்நிலையில், கடந்த, 40 ஆண்டுகளாக, கோவில் போதிய பராமரிப்பு மற்றும் பூஜைகள் இன்றி உள்ளது. கோபுரம் மற்றும் நந்தி மண்டபத்தின் மீது செடிகள் வளர்ந்து, கட்டுமானத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சிதிலமடைந்து வரும் இக்கோவிலை, அறநிலையத் துறை அதிகாரிகள், புனரமைத்து, பூஜை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அலட்சியம் இதுகுறித்து, அப்பகுதி பக்தர் ஒருவர் கூறுகையில், ""அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய் உள்ள கோவில்களை மட்டும் தான் சீரமைத்து, பராமரிக்கின்றனர். வருமானம் இல்லாத, இதுபோன்ற பழமையான கோவில்களை கண்டுகொள்வதில்லை. இக்கோவிலை சீரமைத்து, பூஜை நடத்த அரசு முன்வர வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar