அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா: மஹா அபிஷேகம் நடப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2013 11:05
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் உள்ளது ஸ்ரீ அரியநாச்சியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடப்பது வழக்கம். திருவிழாவை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு பூச்சொரிதல் மற்றும் மஹா அபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடந்தது. மஹா அபிஷேகத்துக்காக சாந்தநாத சுவாமி கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க பால்குடம் எடுத்துவந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மஹா அபிஷேகம் நடந்தது. மஹா அபிஷேகத்தை தொடர்ந்து அம்மனுக்கு சந்தணக்காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.