ஆஞ்சநேயர் கோவிலில் 25ம் தேதி ராமநவமி மகோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2013 11:05
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம் வரும் 25ம் தேதி துவங்குகிறது.அன்றிரவு 7.30 மணிக்கு ஜீயர் சீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் விழாவை துவக்கி வைத்து ஆசியுரை வழங்குகிறார்.பின், பரனூர் கிருஷ்ணப்ரேமி சுவாமிகளின் மகாபாரத உபன்யாசம் துவங்கி வரும் 31ம் தேதி வரை தினம் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதே போல் தினசரி காலை 7 மணிக்கு துவங்கி 11 மணி வரை நடராஜ சர்மாவின் ஸ்ரீமத் வால்மீகி ராமாயண நவாக மூல பாராயணம் நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 2ம் தேதி காலை 8 மணிக்கு சீத்தா லஷ்மண, அனுமந்த சமேத ராமச்சந்திர மூர்த்தி வீதியுலா, முற்பகல் 11 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு திருக் கல்யாணம், இரவு 9 மணிக்கு ஆஸ்தானம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.விழா ஏற்பாடுகளை ஜீயர் சீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகளின் உத்தரவின் பேரில் சத்சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.