வடமதுரை: காணப்பாடியில் ஒக்கலிகர் காப்பு கரவனவார் குல தெய்வமான ஸ்ரீ ஐந்துபந்தி முத்தம்மன், ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள், சப்த கன்னிமார், பொம்மணன் கோயில் உள்ளது. இக்கோயில்களின் கும்பாபிஷேகம் இன்று காலை 10.35 மணிக்கு நடக்கிறது. கர்நாடக மாநிலம் சித்ராதுர்கா மாவட்டம் கொசதுர்கா ஜெகத்குரு குஞ்சடிக சமஸ்தான தலைவர் சாந்தவீரா சுவாமிகள் தலைமை வகிக்கிறார். கோயம்புத்தூர் ஸ்ரீ விஜயலட்சுமி கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி, எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, பாலபாரதி முன்னிலை வகிக்கின்றனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பெரிய மாலை கும்பிடு விழா 24ம் தேதி முதல் 26 வரை நடக்கிறது. இதில் பல்வேறு பாரம்பரிய வழிபாடுகள், கிராமிய கலை, இன்னிசை நிகழ்ச்சிகள், மாடுகளின் ஓட்ட பந்தயம் நடக்கிறது. ஏற்பாட்டினை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.