பதிவு செய்த நாள்
23
மே
2013
10:05
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில், வைகாசி விசாகத்திருவிழா, நாளை, கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோயில்நடை, அதிகாலை, 1:00 மணிக்கு திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கும். அதிகாலை, 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மற்ற காலங்கள் தொடர்கின்றன. பகலில், மூலவருக்கு, உச்சிகால தீபாராதனையைத் தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர், தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி, வசந்த மண்டபத்தில் , முனிகுமாரர்களுக்கு, சாபவிமோசனம் அளிப்பார். முருகன் பிறந்தநாள் என்பதால், ஏராளமான பக்தர்கள், கோயிலுக்கு, பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.