சென்னை கந்தாஸ்ரமத்தில் சத்குரு சந்தானந்த சுவாமிகள் ஆராதனை மகோத்ஸவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2013 10:05
சத்குரு சந்தானந்த சுவாமிகள் ஆராதனை மகோத்ஸவம் 24.5.13 மற்றும் 25.5.13 அன்று சென்னை ஓம் ஸ்ரீ கந்தாஸ்ரமத்தில் கொண்டாடப்படுகிறது. சத்குரு சந்தானந்த சுவாமிகள் ஆராதனையை முன்னிட்டு சென்னை, புதுக்கோட்டை மற்றும் சேலத்தில் சிறப்பு விழாக்கள் நடைபெற இருக்கின்றன. 24.5.13 அன்று சென்னை ஓம் ஸ்ரீ கந்தாஸ்ரமத்தில், காலை 7.15 மணிக்கு கோபூஜை , காலை 8.30 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் அவஹந்தி ஹோமம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து பவமன சுக்த பாராயணம் மற்றும் சதுர் வேத பாராயணம். மதியம் 12 மணிக்கு பட பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 1.00 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு புதிதாக அமைக்கப்பட்ட தேரில் சத்குரு சந்தானந்த சுவாமிகளின் பஞ்ச லோக விக்ரகம் அமைத்த தேர் சுற்றி வரும். இதனையடுத்து நகஸ்வரம், சதுர் வேத பாராயணம், விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் மற்றும் தேவாரம் நடைபெறும். 25.5.13 அன்று காலை 7.15 மணிக்கு கோபூஜை. காலை 8.30 மணிக்கு மகான்யாஸ பூசார ருத்ராபிஷேகத்தை தொடர்ந்து குருவந்தனம் நடைபெறும். காலை 11.30 மணிக்கு குரு படுக்கா பூஜை நடைபெறும். மதியம் 1.30 மணிக்கு தீர்த்த நாராயண பூஜை நடைபெறும். இதனைதொடர்ந்து 2.00 மணிக்கு அன்னதானம். மாலை 6.00 மணிக்கு பஜனை நடைபெறும் பின் பிரசாதங்கள் வழங்கப்படும்.