காஞ்சிபுரம்: குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி, மான் வாகனத்தில் எழுந்தருளினார். காஞ்சிபுரம், மேற்கு ராஜவீதியில் உள்ள குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழா, கடந்த 15ம் தேதி துவங்கியது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு, தேராட்டம் நடந்தது. அதை தொடர்ந்து, நேற்று காலை, மான் வாகனமும், இரவு குதிரை வாகன உற்சவமும் நடந்தது. இன்று காலை, பல்லக்கு உற்சவமும், இரவு, மாவடி சேவை உற்சவம் நடைபெற உள்ளது.