காரைக்கால்: காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் 16ம் ஆண்டு ஏகாதச ருத்ர ஹோம அபிஷேகம் நடந்தது.காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கயிலாசநாதர் கோவிலில் 16ம் ஆண்டு அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், அபிஷேகம், சுப்ரமணியர் அர்ச்சனை நடந்தது. காலை 7 மணிக்கு அம்பாளுக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை சங்கல்பம் நடந்தது. 8 மணிக்கு ஏகாதச ருத்ரகலச பூஜைகள் ஆரம்பமானது. தொடர்ந்து, மஹன்யாசம் பாராயணம், காலை 9 மணிக்கு ஏகாதச ருத்ர பாராயணம், 10 மணிக்கு ஏகாதச ருத்ராபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வஹோர்த்தரா ஹோமம், மகா பூர்ணாஹூதி நடந்தது. பகல் 12 மணிக்கு மகா ஸ்தபன அபிஷேக மகா தீபாராதனை நடந்தது. மாலை 4.30 மணிக்கு பிரதோஷ வழிபாடும், 5.30 மணிக்கு கயிலாசநாதர், சுந்தராம்பிகைக்கு திரிசதி அர்ச்சனை நடந்தது. இரவு கயிலாசநதார், சுந்தராம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன் வீராசாமி தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.