பதிவு செய்த நாள்
23
மே
2013
11:05
கோபிசெட்டிபாளையம்: கோபி, பவளமலை முத்துக்குமாரசுமாமி கோவிலில் வரும், 31ம் தேதி குரு பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பரிகார பூஜை நடக்கிறது. கோபி அருகே முருகன்புதூரில் பிரசித்தி பெற்ற முத்துக்குமாரசுவாமி கோவில் உள்ளது. இங்கு செவ்வாய் கிழமைகளில், சத்ரு சம்ஹார திரிசதை பூஜையுடன், கோமாதா பூஜையும் நடக்கிறது. குருபகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையும் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, இக்கோவிலில் வரும், 31ம் தேதி குரு பெயர்ச்சி சிறப்பு பரிகார ஹோம, பூஜை காலை, 9 மணிக்கு நடக்கிறது. காலை, 11 மணிக்கு முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மலர் அலங்காரம் மற்றும் குருபெயர்ச்சி பரிகார அர்ச்சனை, மஹா தீபாராதனை நடக்கிறது. மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். அன்று மதியம், 12 மணி அளவில் கோபி ஸ்ரீகற்பக விருட்சக அன்னதான குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.