தர்மபுரி: தர்மபுரியை அடுத்த மானியதஹள்ளி ஜருகு அம்பேத்கர் காலனி மாரியம்மன் மற்றும் ஓங்காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடந்தது. இதையொட்டி, கடந்த, 20ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம், அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (மே 22) சூரன் வதை நடந்தது. இன்று (மே 23) காலை, 9 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. * தர்மபுரி, கருவூல காலனி லெனின் நகர் மஹா மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நேற்றுமுன்தினம் துவங்கியது. முதல் நாள் விழாவில், காலை பால்குடம் ஊர்வலமும், மாலை அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று (மே.22) பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. இறுதி நாளான இன்று காலை, 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை, 4 மணிக்கு திருவீதி உலாவும், அதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.