திண்டிவனம்: தீவனூர் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் இரவு கருட சேவை உற்சவம் நடந்தது.திண்டிவனம் அடுத்த தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கடந்த 16ம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. அதிகாலை நடை திறந்து, மூலவருக்கு மகா அபிஷேகம், வெள்ளி கவசம் அணிவித்து தீபாராதனை நடக்கிறது. மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்து வருகிறது.கடந்த 20 ம் தேதி இரவு கருட சேவை உற்சவம் நடந்தது. நேற்று 22ம் தேதி 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. நாளை 24 ம் தேதி காலை தேர் உற்சவம் நடக்கிறது. விழாவில் வடம் பூண்டி முன்னாள் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.