பதிவு செய்த நாள்
23
மே
2013
11:05
திருத்தணி: முருகன் கோவிலில், கடந்த, 21 நாட்களில், பக்தர்கள், 34 லட்சம் ரூபாய் ரொக்கமும், 272 கிராம் தங்கமும் காணிக்கையாக உண்டியலில் அளித்துள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள், தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற, மலைக்கோவிலில் உள்ள உண்டியலில் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர். கடந்த மாதம், 29ம் தேதி முதல், இம்மாதம், 20ம் தேதி வரை, உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை, நேற்று முன்தினம் கோவில் இணை ஆணையர் புகழேந்தி முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. தொடர்ந்து, மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில், கோவில் ஊழியர்களால் பணம், தங்கம், வெள்ளி என, தனித் தனியாக பிரித்து எண்ணப்பட்டது. இதில், 34.17 லட்சம் ரூபாய், 272 கிராம் தங்கம், 2,774 கிராம் வெள்ளி பொருட்கள் கிடைத்துள்ளன. இத்தொகை, பக்தர்கள், 21 நாட்களில் உண்டியலில் அளித்த காணிக்கையாகும்.