பதிவு செய்த நாள்
23
மே
2013
11:05
பழநி: பழநியில் வைகாசி விசாகத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருக்கல்யாணம் இன்று பெரியநாயகியம்மன்கோயிலில் நடக்கிறது.நாளை தேரோட்டம் நடக்கிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா, மே 18ல் துவங்கியது. மே 27 வரை நடக்கிறது. பெரியநாயகியம்மன் கோயிலில் தந்தப்பல்லக்கு, தங்க மயில், காமதேனு, கற்பக விருட்சம், வெள்ளி யானை, தங்கக் குதிரை வாகனங்களில், வீதிகளில் திருவுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் பெரியநாயகியம்மன் கோயிலில், இன்று மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் நடைபெற உள்ளது. நாளை (மே 24) வைகாசி விசாகத்தை முன்னிட்டு, காலை 12 மணிக்கு மேல் 12.40 மணிக்குள் திருத்தேர் ஏற்றமும், மாலை 4.35 மணிக்கு திருத்தேர் வடபிடித்து தேரோட்டம் நடைபெற உள்ளது. மே 25-ல் தங்கக் குதிரை வாகனத்திலும், மே 26ல் மயில் வாகனத்திலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி தெய்வானையுடன் வீதி உலா நடக்கிறது. மே 27ல் பெரியநாயகியம்மன் கோயிலில் கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது. விழாவை முன்னிட்டு, பக்திச் சொற்பொழிவு, பரத நாட்டியம், வீணை, இன்னிசை கச்சேரி மற்றும் கிராம கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணைக்கமிஷனர் பாஸ்கரன், துணைக் கமிஷனர் ராஜமாணிக்கம் செய்து வருகின்றனர்.