மேலூர்: மதுரை திருவாதவூரில், திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 15ல் துவங்கியது. 19ந் தேதி பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி மேலூருக்கு எழுந்தருளினார். நேற்று கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. ஏற்பாடுகளை, கோயில் இணை கமிஷனர் ஜெயராமன், பேஸ்கார் ஜெயபிரகாஷ் செய்திருந்தனர். இன்று(மே 23) காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.