பதிவு செய்த நாள்
24
மே
2013
11:05
புதுச்சேரி: காஞ்சி பரமாச்சாரியாரின் ஜெயந்தியை முன்னிட்டு, நாளை (25ம் தேதி) கருவடிக்குப்பம் வேதாஸ்ரம குருகுலத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. புதுச்சேரி கருவடிக்குப்பம் ஓம்சக்தி நகரில் வேதாஸ்ரம குருகுலம் உள்ளது. இங்கு, காஞ்சி பரமாச்சாரியாரின் ஜெயந்தி விழாவையொட்டி, நாளை (25ம் தேதி) மதியம் பொதுமக்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6.00 மணிக்கு உலக நன்மை வேண்டி ஆவஹந்தி ஹோமம், குருகுலத்தில் தங்கி பயிலும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு, புத்தகம், வேட்டி, துண்டு வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, பரமாச்சாரியாரின் திவ்யநாம பஜனை நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீசாய் சங்கர பக்த சபா தலைவர் அருணாச்சலம், வேதபுரி சனாதண தர்மபரிபாலண சபா மற்றும் புதுச்சேரி பிராமண சமூக நலச் சங்கத்தினர் செய்து வருகின்றனர். மேலும் விபரங்களுக்கு 98423 29770, 98423 27791 என்ற மொபைல் எண்களில் ராஜாசாஸ்திரிகளை தொடர்பு கொள்ளலாம்.