பதிவு செய்த நாள்
24
மே
2013
11:05
தஞ்சாவூர்: ஆலங்குடி, திட்டையில் நடக்கும் குருபெயர்ச்சி விழாவையொட்டி அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், பக்தர்கள் வசதிக்காக, வரும் 28, 29ம் தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என, கும்பகோணம் கோட்ட அதிகாரி கூறியுள்ளார். இதுகுறித்து, அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குருபெயர்ச்சி விழாவையொட்டி ஆலங்குடி, திட்டை, சூரியனார் கோவில்களுக்கு சிறப்பு பஸ் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும். குருபெயர்ச்சி விழா நாளான 28ம் தேதி காலை முதல் 29ம் தேதி காலை வரை கும்பகோணம்-ஆலங்குடி, நீடாமங்கலம்-ஆலங்குடி, மன்னார்குடி-ஆலங்குடி, திருவாரூர்-ஆலங்குடி, கும்பகோணம்-சூரியனார் கோவில், மயிலாடுதுறை- சூரியனார்கோவில், தஞ்சை-திட்டை வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்படும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.