Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரும் 28ல் குருபெயர்ச்சி விழா ... சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீநிவாசா- பத்மாவதி தாயார் நாளை திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2013
11:05

தேனி: தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில், ஸ்ரீநிவாசா- பத்மாவதி தாயார் திருக்கல்யாண உற்சவம், நாளை நடக்கிறது. திருப்பதி தேவஸ்தானம், ஸ்ரீ மூகாம்பிகா கல்வி அறக்கட்டளை, தேனி கம்மவார் கல்வி நிறுவனங்கள் இணைந்து, ஸ்ரீவாரி ஸ்ரீநிவாசா- பத்மாவதி தயார் திருக்கல்யாண உற்சவத்தை, தேனி கொடுவிலார்பட்டி கம்மவார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நாளை நடத்துகின்றனர். இதற்காக திருமலையில் இருந்து, இன்று மாலை 6 மணிக்கு தேனி வரும் ஸ்ரீநிவாச பெருமாள், நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள வி.எல்.கே., திருமண மண்டபத்தில் இரவு தங்குகிறார். நாளை காலை 6 மணிக்கு, மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 10 மணிக்கு, திருப்பதி தேவஸ்தான கமிட்டியினர் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு சென்று, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மரியாதை செலுத்துகின்றனர். பகல் 2 மணிக்கு, மண்டபத்தில் இருந்து பெருமாள் ஊர்வலமாக கொடுவிலார்பட்டி திருமண மண்டப வளாகத்திற்கு புறப்படுகிறார்.ஊர்வலத்தில் யானை, ஒட்டகம், குதிரை, செண்டை மேளம், தேவராட்டம், கோலாட்டம், விஷ்ணு பாராயணம், பஜன் நடக்கிறது. மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, 2 மணி நேரம் ஊர்வலம் சென்று மாலை 4 மணிக்கு கொடுவிலார்பட்டி கம்மவார் பொறியியல் கல்லூரி மைதானத்தை அடைகிறார். அங்கு,மாலை 6 மணி வரை திருமண அலங்காரம் நடக்கிறது. மாலை 6 மணி முதல் 9 மணி வரை இத்திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்பவர்களுக்கு, லட்டு பிரசாதம், சுப்பிரபாத புத்தகம், கோவிந்தா நாமாவளி புத்தகம், பெருமாள் தாயார் படங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சியை, திருக்கல்யாண உற்சவ கமிட்டி தலைவர் ஆ.ஜே.குணாளன், செயலாளர் வீரராகவன், கம்மவார் சங்க தலைவர் கிருஷ்ணசாமி, பொறியியல் கல்லூரி செயலாளர் பொன்னுச்சாமி, கலை, அறிவியல் கல்லூரி தலைவர் தாமோதரன், நிர்வாகிகள் நம்பெருமாள்சாமி, கண்ணன் செய்து வருகின்றனர். இத்திருமணத்தில் பங்கேற்கவும், கூடுதல் தகவல்கள் பெறவும், 94431-36798, 98412-18159 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடபழனி; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில் 3ம் தேதி இரவு, கொடியேற்றத்துடன், நவராத்திரி ... மேலும்
 
temple news
சூலூர்; வீடுகள் கோவில்களில் நவராத்திரி விழா ஒட்டி, கொலு பொம்மைகள் வைத்து வழிபாடுகள் நடந்தன.நவராத்திரி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar