பதிவு செய்த நாள்
24
மே
2013
11:05
காஞ்சிபுரம்: குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி, பல்லக்கு உற்சவத்தில் எழுந்தருளினார். காஞ்சிபுரம், மேற்கு ராஜவீதியில் உள்ள குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழா, கடந்த 15ம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, மான் வாகனமும், இரவு, குதிரை வாகன உற்சவமும் நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு, பல்லக்கு உற்சவமும் அதை தொடர்ந்து, இரவு, மாவடி சேவை உற்சவமும் நடந்தது. இன்று, விசாகப் பெருவிழாவும், இரவு, கேடயம் மங்களகிரி உற்சவமும் நடைபெற உள்ளன.