பதிவு செய்த நாள்
24
மே
2013
11:05
சிங்கப்பெருமாள்கோவில்: சிங்கப்பெருமாள்கோவில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள், தீர்த்தவாரி உற்சவத்தில் அருள்பாலித்தார். சிங்கப்பெருமாள் கோவிலில் அமைந்துள்ள பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. 9ம் நாள் விழாவை முன்னிட்டு, நேற்று, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. காலை 11:00 மணிக்கு, நரசிம்ம பெருமாள் சுத்த புஷ்கரணி குளத்தில் எழுந்தருளினார். அங்கு, சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை, புஷ்ப பல்லக்கு வாகனத்தில், வீதியுலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர். நாளை, துவா தசாராதனம் திருமஞ்சன உற்சவம் நடைபெற உள்ளது.